நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிகர லாபம் ரூ.2,342 கோடி
Views - 221 Likes - 0 Liked
-
நெய்வேலி லிக்னைட் கார்ப்ப ரேஷன் (என்எல்சி) நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.8,672 கோடியே 84 லட்சத்துக்கு வர்த்தகம் மேற் கொண்டு ரூ.2,342 கோடியே 20 லட்சத்தை நிகர லாபமாக பெற்றுள்ளது.
என்எல்சி நிறுவனம் நெய்வேலியில் மூன்று, ராஜஸ்தான் மாநிலம் பர்சிங்சரில் ஒன்று என மொத்தம் 4 திறந்தவெளி பழுப்பு நிலக்கரி சுரங்கங்களை செயல்படுத்தி வருகிறது.
இச்சுரங்கங்கள், ஆண்டுக்கு 3 கோடியே 6 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. அதுபோன்று, நெய்வேலியில் நான்கு, பர்சிங்சரில் ஒன்று என மணிக்கு சுமார் 32 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் (3,240 மெகாவாட்) மின் சக்தி உற்பத்தி செய்யும் 5 அனல் மின் நிலையங்களை இந்நிறுவனம் இயக்கி வருகிறது.
மேலும், நெய்வேலியில் 10 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் நிலையத்தையும், திருநெல்வேலி மாவட்டம் கழுநீர்குளத்தில் 45 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் நிலையத்தையும் செயல்படுத்தி வருகிறது. ஆக, இந்நிறுவனம் மொத்தம், 3,295 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளது.
மேலும் என்எல்சி நிறுவனம், தமிழ்நாடு மின் நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடியில் செயல் படுத்தப்பட்டுவரும் 1,000 மெகா வாட் திறன் கொண்ட நிலக்கரி யில் இயங்கும் அனல்மின் நிலை யத்தையும் இயக்கி வருகிறது.
2016-17-ம் நிதியாண்டில் இந் நிறுவனத்தில் உள்ள அனைத்து சுரங்கங்களிலிருந்தும் 2 கோடியே 76 லட்சத்து 17 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 2,234 கோடியே 5 லட்சத்து 90 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி மேற்கொண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
News