தகவல் தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
Views - 226 Likes - 0 Liked
-
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய ராக்கெட்டுகள் மூலம் பூமியை படம் எடுத்து அனுப்புதல், வானிலை முன்னறிவிப்புகள், புயல் எச்சரிக்கை, கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு, கடல்சார் ஆய்வு, பூமி ஆய்வு, கல்லூரி மாணவர்களுக்கான ஆய்வுகள் போன்றவற்றுக்காக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.குறைந்த எடைகொண்ட செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமும், 2 முதல் 2½ டன் எடைகொண்ட செயற்கைகோள்களை ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமும் விண்ணில் செலுத்தி வருகிறது.இதைவிட அதிக எடைகொண்ட செயற்கைகோள்களை ‘பிரெஞ்ச் கயானா’வில் இருந்து ‘ஏரியன்’ வகை ராக்கெட் மூலம் அனுப்புகிறது.அடுத்த தலைமுறை ராக்கெட்இந்த ராக்கெட்டுகள் செயற்கைகோள்களை மட்டுமே விண்ணில் நிலைநிறுத்தும் சக்தி படைத்தவை. ஆனால் மனிதர்களை சுமந்து செல்லும் விண்கலங்களை அனுப்பும் திறன் கிடையாது. செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்புவதில் இஸ்ரோ தன்னிறைவு பெற்றுள்ளது.இந்தநிலையில் தற்போது முதன் முறையாக மனிதனை விண்ணுக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்வதற்காக அடுத்த தலைமுறைக்கான ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட்டை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ நிறுவனம் கடந்த 2009–ம் ஆண்டு இறங்கியது. இது, இஸ்ரோ தயாரித்த ராக்கெட்டுகளிலேயே மிக அதிக எடை கொண்டது.வெற்றிகரமாக ஏவப்பட்டதுஇந்த ராக்கெட் மூலம் அதிகபட்சமாக 8 டன் எடையை சுமந்து செல்ல முடியும் என்பதால், இந்திய வீரர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வது இந்த ராக்கெட்டுக்கு சுலபமாக இருக்கும். பொதுவாக சிறந்த விண்வெளி ஆய்வு நிறுவனங்களே துணிந்து களமிறங்கக் கூடிய அதிக எடை கொண்ட ராக்கெட் பிரிவில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட் மூலம் இஸ்ரோவும் கால் பதித்துள்ளது.இந்தநிலையில் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட்டை இஸ்ரோ உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.இந்த ராக்கெட் மூலம் தகவல்தொடர்புக்கான ஜி.சாட்–19 என்ற செயற்கைகோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2–வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் அனுப்ப இஸ்ரோ முடிவுசெய்தது. இதற்கான இறுதிக்கட்டப்பணியான 25½ மணி நேர கவுன்டவுன் முடிந்து நேற்று மாலை 5.28 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.செயற்கைகோள் பிரிந்தது10 ஆண்டுகள் ஆயுள்காலத்தை கொண்ட, ஜி.சாட்–19 செயற்கைகோள் பூமியில் இருந்து ஏவப்பட்டு 16 நிமிடத்தில் 179.146 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.இந்த பயணத்தில் ராக்கெட்டின் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கைகோளை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. 3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட்டின் 3 நிலைகளிலும் திட மற்றும் திரவ எரிபொருட்கள் நிரப்பப்பட்டு இருந்தன. 43.43 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட்டின் எடை 640 டன் ஆகும்.விஞ்ஞானிகள் மகிழ்ச்சிராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் ஏ.எஸ்.கிரண்குமார் இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினரும், பத்திரிகையாளர்களும் கூடி இருந்தனர். அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.செயற்கைகோளின் எடை 3,136 கிலோஇந்த ராக்கெட் நிலை நிறுத்தியுள்ள ஜி.சாட்–19 தகவல் தொடர்பு செயற்கைகோள் 3 ஆயிரத்து 136 கிலோ எடைகொண்டது. பூமியில் இருந்து இந்த செயற்கைகோள் குறைந்தபட்சம் 179 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சம் 35 ஆயிரத்து 975 கிலோ மீட்டர் தொலைவிலும் பூமியை சுற்றுவரும் நவீன வசதிகளை கொண்ட தகவல் தொடர்புக்கான டிரான்ஸ்பாண்டர்கள் இந்த செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ளன.இதன்மூலம் இணையதள சேவையை விரைவாகவும், துல்லியமாகவும் பெறமுடியும். இந்த செயற்கைகோளில் 4 ஆயிரத்து 500 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள் மற்றும் 2 ஆன்டெனாக்கள், சூரிய மின் உற்பத்தி தகடுகள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.பிரதமர் மோடி வாழ்த்துஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து உள்ளனர்.இதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.News