காசநோய் தடுப்பு திட்டத்தில் பயன்பெற இனி ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு
Views - 196 Likes - 0 Liked
-
மத்திய அரசின் காசநோய் தடுப்பு திட்டத்தில் பய்னபெற காச நோயாளிகள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் காசநோய் சிகிக்கை பெரும் நோயாளிகள் இலவச சிகிச்சை பெற ஆகஸ்ட் 31-ம் தேதிக்கும் தங்கள் ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நோயாளிகள் வசிக்கும் பகுதிகளில் ஆதார் பதிவு மையம் இல்லையென்றால் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால் தகுந்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆதார் எடுக்கும் வரை பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அயைாள அட்டையை சமர்ப்பித்து சிகிச்சையை தொடரலாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. முன்னதாக வங்கிகள், பத்திரப்பதிவு, எரிவாயு இணைப்பு, ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்டவற்றிற்கு மத்திய அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்கியிருந்த நிலையில் தற்போது மருத்துவத்திற்கும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.News