இந்திய பங்குச்சந்தைகளில் உயர்வு: சென்செக்ஸ் 100 புள்ளிகளும், நிஃப்டி 10,100 புள்ளிகளும் கடந்தது
Views - 203 Likes - 0 Liked
-
வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 65 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் 205.06 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100.51 புள்ளிகள் உயர்ந்து 32,615.45 புள்ளிகளாக உள்ளது. உலோகம், ஆட்டோ, ஐடி, ரியல் எஸ்டேட், சுகாதாரம் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.99% வரை அதிகரித்து காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23.95 புள்ளிகள் அதிகரித்து 10,101.05 புள்ளிகளாக உள்ளது.
விப்ரோ, அதானி துறைமுகம், ஹீரோ மோட்டோ கார்ப், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருந்தது.
ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.48%, ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.17% மற்றும் சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.42% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.28% வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.News