நாடு முழுவதும் 9.3 கோடி பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு
Views - 193 Likes - 0 Liked
-
நாடு முழுவதும் சுமார் 30 கோடி பேர் ‘பான்’ எனப்படும் நிரந்தர கணக்கு எண் வைத்துள்ளனர். இந்த பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் கடந்த மாதம் 1–ந்தேதி முதல், பான் எண்ணுக்கு விண்ணப்பிப்போருக்கும் ஆதார் எண் அவசியம் என அறிவிக்கப்பட்டது.
எனவே பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான நடவடிக்கைகளை பான் கார்டு வைத்திருப்போர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வருமான வரித்தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்த கடந்த 5–ந்தேதி வரை 9.3 கோடிக்கும் அதிகமானோர் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது பான் கார்டு வைத்திருப்போரின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 30 சதவீதம் ஆகும். பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை இந்த மாதம் இறுதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்து உள்ளதால், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகாரிக்கும் எனவும் அந்த அதிகாரி கூறினார்.
News