2 லட்சம் நிறுவனங்களின் வங்கி கணக்கை கட்டுப்படுத்த உத்தரவு மத்திய அரசு அதிரடி
Views - 199 Likes - 0 Liked
-
வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி நிறுவனங்களை தொடங்கி மோசடியில் ஈடுபடுவது நமது நாட்டில் பரவலாக காணப்படுகி றது. இதன் மூலம் கருப்பு பணம் வெள்ளையாக்கப்படுகிறது.
மோடி அரசு இதுபோன்று போலி பெயர்களில் தொடங்கப்பட்டுள்ள சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் நிறுவனங்களின் பதிவுகளை, கம்பெனிகள் சட்ட விதிகளின்படி ரத்து செய்து உள்ளது. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் நீண்டகால செயல்பாட்டில் இல்லாதவை ஆகும்.
இந்த நிறுவனங்களின் பெயர், விவரங்கள் குறித்த தகவல்கள் கம்பெனி விவ காரங்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் பட்டியலாக வெளியிடப்பட்டும் இருக்கிறது.
மேலும் இந்த நிறுவனங்களின் தற்போதைய இயக்குனர்கள் மற்றும் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட அனைவரும் முன்னாள் இயக்குனர்கள், முன்னாள் கையெழுத்திடும் அதி காரம் கொண்டவர்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
முறையான பதிவை மீண்டும் இவை பெறாதவரை இந்த நிறுவனங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இனி தனிப்பட்ட நபர்கள் எடுக்க முடியாது. எனவே பதிவு ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களின் வங்கி கணக்கு விவகாரங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படும்படி இந்திய வங்கிகள் சங்கத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதே நேரம் கம்பெனி விவகாரங்கள் அமைச்சகத்தின் இணையதள செயல் பாட்டில் இந்த நிறுவனங்கள் இடம்பெற்றிருந்து ஆண்டு நிதி அறிக்கை, ஆண்டு வருமானம், வங்கிகளில் வாங்கிய கடன் போன்ற விவரங்களை தெரிவிக்காமல் இருந்தால் அதில் சந்தேகத்திற்கான முகாந்திரம் இருப்பதாக கருதி அந்த நிறுவனங்களை முழுமையாக வங்கிகள் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்றும் வங்கிகள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன.
கருப்பு பண ஒழிப்பின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த அதிரடி உத்தரவை மத்திய அரசு பிறப்பித்து இருக்கிறது.News