குரூப்-2 முதன்மை தேர்வில் 2,169 பேர் தேர்ச்சி
Views - 271 Likes - 0 Liked
-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகம் துணை வணிக வரித்துறை அதிகாரிகள், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்-பதிவாளர்கள், உள்ளாட்சி மற்றும் நிதி தணிக்கை துறையில் உதவி ஆய்வாளர்கள், கூட்டுறவு சங்க முதுநிலை ஆய்வாளர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக வரித்துறை மேற்பார்வையாளர்கள், தலைமை செயலக உதவி பிரிவு அதிகாரி போன்ற 18 வகையான பதவிகளுக்கு 1,094 காலி பணியிடங்களுக்கான குருப்-2 தேர்வை அறிவித்தது.முதல் நிலை தேர்வு 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. இந்த தேர்வை 8 லட்சம் பேர் எழுதினர். இதில் 12 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.முடிவு வெளியீடுமுதன்மை தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 9 ஆயிரத்து 833 பேர் எழுதினர். முதன்மை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 169 பேர் தேர்ச்சி பெற்றனர். அந்த பட்டியல் www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டது.வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் 20-ந் தேதி முதல் நவம்பர் 3-ந் தேதி வரை சான்றிதழ் சரிபார்த்தல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதன் பிறகு நேர்முக தேர்வு நடைபெறும்.143 பேர் தேர்ச்சிகுரூப்-2 தேர்வு குறித்து சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-குரூப்-2 முதன்மை தேர்வில் பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 143 பேர் வெற்றி பெற்று உள்ளனர். மனிதநேய கட்டணமில்லா மையம் தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளுக்கும் சிவில் சர்வீசஸ் உள்பட பல்வேறு தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 10 வருடங்களில் சிவில் சர்வீசஸ் தேர்வு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் மாவட்ட நீதிபதி, சிவில் நீதிபதிகள், சப்-இன்ஸ்பெக்டர், உதவி பொறியாளர் போன்ற பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளில் இதுவரை 2 ஆயிரத்து 955 பேருக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்று மத்திய, மாநில அரசு பதவிகளில் உள்ளனர்.நேர்முக தேர்வுக்கு பயிற்சிமுதன்மை தேர்வில் வெற்றி பெற்று நேர்முக தேர்வுக்கு செல்லும் அனைத்து மாணவ- மாணவிகளும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு மனிதநேய கட்டணமில்லா மையத்தில் நேர்முக தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே மாணவ-மாணவிகள் கட்டணமில்லா பயிற்சி பெற பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அழைப்பு கடிதத்துடன் 28, பிரதான சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை-35 என்ற முகவரிக்கு நேரில் வந்து இன்று (வியாழக்கிழமை) முதல் பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.News