வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி 2 பேர் மீது வழக்குப்பதிவு
Views - 252 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
பூதப்பாண்டி அருகே திட்டுவிளையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருடைய மகன் வினிஷ் (வயது 23). கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடி வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த நாகூர்மீரான்(53) மற்றும் ஹாஜா ஜெகபர் சாதிக் ஆகியோர் வினிஷிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி ரூ.2 லட்சம் பெற்றதாக தெரிகிறது.ஆனால், நாகூர்மீரான், ஹாஜா ஜெகபர் சாதிக் ஆகியோர் வினிசுக்கு வெளிநாட்டில் வேலையும் வாங்கி தரவில்லை, ரூ.2 லட்சத்தையும் திரும்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து வினிஷ் நாகர்கோவில் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் நாகூர்மீரான், ஹாஜா ஜெகபர் சாதிக் ஆகியோர் சேர்ந்து வினிஷ் உள்பட 13 பேரிடம் தலா ரூ.2 லட்சம் வீதம் என மொத்தம் ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக தெரிய வந்தது.
இதுதொடர்பாக நாகூர்மீரான் மற்றும் ஹாஜா ஜெகபர் சாதிக் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.News