10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருங்கால வைப்புநிதி அலுவலக ஊழியர்கள் வேலைநிறுத்தம்
Views - 264 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,வருங்கால வைப்புநிதி பணியாளர்களின் சீர்திருத்தம் பற்றிய கமிட்டி பரிந்துரைகளை உடனே நிறைவேற்ற வேண்டும், பணியாளர்களின் வேலைச்சுமையை குறைக்க வேண்டும், பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருங்கால வைப்புநிதி நாகர்கோவில் மண்டல அலுவலக ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.இதையொட்டி வருங்கால வைப்புநிதி அலுவலக ஊழியர்கள் அலுவலக வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்க பொதுச்செயலாளர் அமானுல்லாகான் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். கிருஷ்ணன், உசேன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் பிரேம் ஆனந்த் நன்றி கூறினார்.தர்ணா போராட்டம் நேற்று காலையில் இருந்து மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த போராட்டத்தின் காரணமாக அலுவலகத்தில் ஒருசில அதிகாரிகள் மட்டுமே பணியில் இருந்தனர். பெரும்பாலான ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.இதுதொடர்பாக பொதுச்செயலாளர் அமானுல்லாகான் கூறியதாவது:-வேலை நிறுத்த போராட்டத்தின்போது ஆணையர் மற்றும் உதவி ஆணையர் மட்டுமே பணியில் இருந்தனர். மொத்தம் உள்ள 55 ஊழியர்களில் 40 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். மீதமுள்ளவர்கள் விடுப்பில் சென்றுள்ளனர். வேலைநிறுத்தத்தால் வருங்கால வைப்புநிதி எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கின.இவ்வாறு அவர் கூறினார்.News