மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி போல் நடித்து தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியவர் கைது
Views - 296 Likes - 0 Liked
-
செங்குன்றத்தில் மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரி போல் நடித்து தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.செங்குன்றம்,
சென்னை வேப்பேரியை சேர்ந்த தொழில் அதிபர் குணால். இவர் செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று இவரது நிறுவனத்திற்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி என்று கூறிக்கொண்டு ஒருவர் வந்தார். அவர், இந்த நிறுவனம் சுற்றுச்சூழல் மாசுக்கு காரணமாக இருப்பதாகவும், அதற்கு தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், இந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த வேண்டுமென்றால் தனக்கு ரூ.5 லட்சம் தரவேண்டுமென்று கேட்டுள்ளார். அவ்வாறு தரவில்லை என்றால் மாசுகட்டுப்பாடு வாரியம் மூலம் நிறுவனத்தை பூட்டி சீல் வைத்து விடுவோம் என்று கூறி மிரட்டியதாக தெரிகிறது.News