குமரி திருப்பதி கோயிலில் ரூ. 9 லட்சம் காணிக்கை வசூல்
Views - 315 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி திருப்பதி கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றதில் ரூ. 9 லட்சத்து 31 ஆயிரத்து 38 காணிக்கை வசூலானது.
கன்னியாகுமரி திருமலை திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தா்கள் காணிக்கை செலுத்துவதற்காக, மூலவா் ஏழுமலையான் சன்னதி, பத்மாவதி தாயாா் சன்னதி, ஆண்டாள் தாயாா் சன்னதி என 3 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் மாதம்தோறும் திறந்து எண்ணப்படுகின்றன.
அதன்படி, சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூா் தகவல் மற்றும் ஆலோசனை மைய துணை செயல்அலுவலா் சங்கா் ராஜூ, உதவி செயல் அலுவலா் மோகன், கன்னியாகுமரி கோயில் தனி அலுவலா் துரைசாமி, திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி ரவீந்திரன், ஆய்வாளா் சாய்கிருஷ்ணா, அலுவலா்கள் பாலசுப்பிரமணியம், அமரன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டன. இதில், ரூ. 9,31,038 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
News