வரலாறு காணாத புதிய உச்சம் தங்கம் விலை ரூ.38 ஆயிரத்தை கடந்து விற்பனைவெள்ளியும் ‘கிடுகிடு’ உயர்வு
Views - 275 Likes - 0 Liked
-
சென்னை,
தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தை கடந்த நிலையில், அதே மாதத்தில் 8-ந்தேதி ரூ.31 ஆயிரத்தையும் தாண்டியது. தொடர்ச்சியாக விலை உயர்ந்ததால், அதற்கு அடுத்த மாதத்தில் (பிப்ரவரி) ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்தையும் கடந்து விற்பனை ஆனதுஇப்படியாக ஒவ்வொரு மாத இடைவெளியில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,000 என்று உயர்ந்து வந்து, கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி ரூ.37 ஆயிரம் என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒருமாத இடைவெளியில் நேற்று ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்தையும் கடந்து இருக்கிறது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 717-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 736-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.56-ம், பவுனுக்கு ரூ.448-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 773-க்கும், ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 184-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது.
தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக அதன் விலையும் தாறுமாறாக எகிறி இருக்கிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 60 ரூபாய் 10 காசுக்கும், ஒரு கிலோ ரூ.60 ஆயிரத்து 100-க்கும் விற்பனை ஆனது. நேற்று ஒரேநாளில் கிராமுக்கு 3 ரூபாய் 80 காசும், கிலோவுக்கு ரூ.3 ஆயிரத்து 800-ம் உயர்ந்து, ஒரு கிராம் 63 ரூபாய் 90 காசுக்கும், ஒரு கிலோ ரூ.63 ஆயிரத்து 900-க்கும் விற்பனை ஆனது.
வெள்ளி விலை கடந்த 10 நாட்களில் கிராமுக்கு 7 ரூபாய் 10 காசும், கிலோவுக்கு ரூ.7 ஆயிரத்து 100-ம் அதிகரித்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கான காரணம் குறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, ‘இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தங்கம் ஆபரண பொருளாகவும், வளர்ந்த நாடுகளில் முதலீட்டுக்கான பொருளாகவும் இருக்கிறது. கடந்த 4 மாதங்களில் 25 சதவீதம் அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதால், அதன்மீது பெருமுதலீட்டாளர்களின் முதலீடு குவிகிறது. இந்த காரணத்தினால் தங்கம்விலை உயருகிறது. இனிவரக்கூடிய நாட்களிலும் விலை அதிகரித்து இம்மாத இறுதியில் ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்தையும் கடந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்News