‘இ-பாஸ்’ நடைமுறை எளிதாக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Views - 291 Likes - 0 Liked
-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதலைமையில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது
இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-திண்டுக்கல் மாவட்டத் தில் கொரோனா நோய்த் தொற்று படிப்படியாக குறைய தொடங்கி இருக் கிறது. ஒவ்வொரு உயிரும் அரசுக்கு மிக முக்கியம், மக்களை காப்பதுதான் அரசின் கடமை. அந்த அடிப்படையில்தான் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் தங்களை இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடையச் செய்து கொண்டிருக்கிறார்கள்.அரசு அறிவிக்கும் வழிமுறை களை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் இறக்கக்கூடிய சூழ்நிலை கூட நேரிடலாம். மேலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்காத காரணத்தால், மருந்தின் மூலம் குணப்படுத்த முடியாத சூழ்நிலையால் ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும்பொழுது கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்.கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்ததன் மூலம் மக்கள் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். இதற்கு தேவையான நிதி உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது, நிதி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறையின் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 533 பண்ணைக் குட்டைகள், 403 தடுப்பணைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வேடசந்தூர், தங்கம்மாபட்டி கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் உணவுப் பூங்கா அமைக் கப்பட உள்ளது.சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டினை நடத்தி, புதியதிட்டங்களை கொண்டு வந்த காரணத்தால், இந்த மாவட்டத்தில், நிலக்கோட்டை, சிப்காட் தொழிற்பூங்காவில்,அமெரிக்காவைச் சேர்ந்த ஆம்வே நிறுவனம் ரூபாய் 250 கோடி முதலீட்டில் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் மருந்து மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்கள் உற்பத்தி விரிவாக்க திட்டத்தை நிறுவி உள்ளது.2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு பின், அணில் சேமியா, அம்பிகா காட்டன் மில்ஸ் மற்றும் சுவாதி ஹேட்ச்சரீஸ் என மூன்று நிறுவனங்கள் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன. இதன்மூலம், சுமார் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.சிப்காட்டில், ரூபாய் 1,000 கோடி முதலீட்டில் 63 நிறுவனங்கள் நிறுவப்பட உள்ளன. இதன்மூலம் சுமார் 3,000 நபர்கள் நேரடியாக வேலைவாய்ப்பு பெற உள்ளனர். இதுவரை, 31 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5.25 கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளது. 4,733 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சுமார் ரூபாய் 106 கோடி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இந்த மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் பல தடுப்பணைகள் கட்டும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. கொடைக்கானலில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு உள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெரியகுளம், கேரளா பகுதியிலிருந்து கொடைக்கானலுக்கு குறைந்த தூரத்தில், குறுகிய காலத்தில் சென்றடைவதற்கு கும்பக்கரை முதல் அடுக்கம் வரையிலான சாலை அமைக்கும் பணியையும் இந்த அரசுதான் செய்து உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-கேள்வி:- புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதுபற்றிய தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?பதில்:- அதுபற்றி ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டேன். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கனவை நனவாக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுகிறோம்.கேள்வி:- சுற்றுலாவுக்கு அனுமதி இல்லாததால், கொடைக்கானல் நகர மக்கள் 4 மாதங்களாக தவித்து வருகின்றனர். இதற்கு அரசு எடுக் கும் நடவடிக்கை என்ன?பதில்:- சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. அவற்றை மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகமிக முக்கியம் ஆகும்.தொழிற்சாலைகள் 100 சதவீதம் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இயங்குகிறது. கொடைக்கானல் செல்வதற்கு நாங்கள் சாலை அமைத்து கொடுத்து உள்ளோம். பெரியகுளம் முதல் அடுக்கம் வரை சாலை அமைக்கப்படுகிறது. கொடைக்கானல் மட்டுமல்ல, அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பாதிப்பு உள்ளது. எனவே, அரசு அறிவித்த வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.உள்கட்சி பிரச்சினைகேள்வி:- தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்து உள்ளது. அதை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?பதில்:- கனமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. அமைச்சர்கள் நேரில் சென்று நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டேன். அதன்படி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு தேவையான நடவடிக்கையை எடுத்து உள்ளது.கேள்வி:- ஆயிரம் விளக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம், தி.மு.க. குடும்ப கட்சி என கூறி இருக்கிறாரே?பதில்:- அது, அவர்களின் உள்கட்சி பிரச்சினை.எஸ்.வி.சேகர்கேள்வி:- நயினார் நாகேந்திரன் அதிருப்தியில் இருக்கிறார். மீண்டும் அவர் அ.தி.மு.க.வுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?பதில்:- அ.தி.மு.க.வில் இருந்து தான் அவர், பா.ஜனதா சென்றார். அ.தி.மு.க. வுக்கு மீண்டும் வந்தால் சேர்த்துக் கொள்வோம்.கேள்வி:- எஸ்.வி.சேகர், முதல்-அமைச்சருக்கு இந்தி தெரியும் என்று கூறியிருக்கிறாரே?பதில்:- எனக்கு இந்தி தெரியும் என்று அவருக்கு எப்படி தெரியும். அவர், எந்த கட்சியை சேர்ந்தவர். பா.ஜனதாவில் இருந்தார் என்றால் அவர் பிரசாரத்துக்கு வரவில்லை. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது பேசுவார், வழக்கு என்றால் ஒளிந்து கொள்வார்.கேள்வி:- கொரோனா காலத்தில் ராமர் கோவில் கட்டுவது தவறானது என்று சமூக வலைத்தளங்களில் கருத்து பரவுகிறது. அதுபற்றி உங்களது கருத்து என்ன?பதில்:- ராமர் கோவில் பிரச்சினை நீண்டகாலமாக இருக்கிறது. அது இன்று நேற்றைய பிரச்சினை அல்ல. நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுகிறார்கள்.கேள்வி:- இ-பாஸ் பெறுவதில் மக்களுக்கு சிரமம் உள்ளது. அது எளிமையாக்கப்படுமா?பதில்:- தமிழகம் முழுவதும் இ-பாஸ் வழங்கும் நடைமுறை எளிதாக்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இ-பாஸ் வழங்குவதற்கு ஒரு குழு மட்டுமே இருந்தது. தற்போது கூடுதலாக மற்றொரு குழு நியமிக்கப்படுகிறது.அத்தியாவசிய தேவைக்கு, உண்மையான காரணத்தை தெரிவித்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்News