குமரி மாவட்டத்தில் இரவு 8 மணி வரை கடைதிறக்க அனுமதி : எம்எல்ஏ விஜயதரணி கோரிக்கை!
Views - 43 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை எம்எல்ஏ விஜயதரணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து விளவங்கோடு எம்.எல்.ஏ., விஜயதரணி வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இரவு 8 மணி வரை கடைகள் திறந்து செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் எந்த வரைமுறையுமின்றி இரவு 8 மணி வரை இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலைகள் இல்லாத நிலையில் விவசாயப் பணிகள் மற்றும் கூலி வேலைக்குச் சென்று வீடு திரும்பும் தொழிலாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது அன்றாட வருவாயை கொண்டு மாலை வேளையில் கடைகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறாா்கள். எனவே பிற மாவட்டங்களைப் போல் குமரி மாவட்டத்திலும் கடைகளை இரவு 8 மணி வரை திறந்து செயல்பட மாவட்ட நிா்வாகம் ஆவன செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளாா்.News