நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து மாற்றம்
Views - 290 Likes - 0 Liked
-
நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக (4 ம் தேதி) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை மற்றும் கூட்டுகுடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் சங்கம், நுகர்பொருள் லாரி உரிமையாளர்கள் சங்கம், கோட்டார் வர்த்தக சங்கம் மற்றும் அப்டா மார்க்கெட் வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுடன் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் , நாகர்கோவில் ஆர்டிஓ மயில், நாகர்கோவில் டிஎஸ்பி வேணுகோபால் மற்றும் நாகர்கோவில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்தில் நாகர்கோவில் நகருக்குள் கனரக சரக்கு வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.
காவல்கிணறில் இருந்து ஆரல்வாய்மொழி வழியாக மாவட்டத்தின் மேற்குப் பகுதிக்கு செல்லும் கனரக வாகனங்களும் அதேபோல் மேற்குப் பகுதியிலிருந்து ஆரல்வாய்மொழி வரும் கனரக வாகனங்களும் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் நுழையாமல் செண்பகராமன்புதூர், துவரங்காடு, தடிக்காரன்கோணம், குலசேகரம் வழியாக செல்ல வேண்டும் அல்லது செண்பகராமன்புதூர், துவரங்காடு, இறச்சகுளம், களியங்காடு வழியாக செல்ல வேண்டும்.
காவல்கிணற்றில் இருந்து ஆரல்வாய்மொழி வழியாக மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்கு செல்லும் கனரக வாகனங்கள் காவல்கிணறு, அஞ்சுகிராமம், வழுக்கம்பாறை, சுசீந்திரம், இடலாக்குடி,ஈத்தாமொழி ரோடு வழியாக செல்லும், அதே போல் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் இருந்து ஆரல்வாய்மொழி செல்லும் கனரக வாகனங்களும் இதே வழியில் செல்ல வேண்டும்.
கோட்டார் மார்க்கெட்டுக்கு அத்தியாவசிய பொருட்கள் இறக்க வரும் கனரக வாகனங்கள் காவல்கிணறு, அஞ்சுகிராமம், வழுக்கம்பாறை, சுசீந்திரம், இடலாக்குடி வழியாக உள்ளே வரவும் வெளியே செல்லவும் வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றம் ( 4 ம் தேதி) காலை 6 மணி முதல் அமல்படுத்தப்படுகிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது .
News