பழுதடைந்து போக்குவரத்துக்கு மோசமாக காணப்பட்ட கோதநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் ரோடு சீரமைப்பு பணி நடந்தது.
கோதநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் ரோடு மிக மோசமாக பழுதடைந்து பல மாதங்களாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற விதத்தில் காணப்பட்ட நிலையில் மேற்படி ரோட்டை சீரமைக்க கோரி சுற்று வட்டார மக்கள் பல முறை கோரிக்கை வைத்திருந்தனர்.
சமீபத்தில் இதுபற்றி தினமலர் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியிருந்தது. இந்த நிலையில் சம்மந்தப்பட்ட துறையினர் பழுதடைந்து போக்கு வரத்துக்கு மோசமாக இருந்த ரோட்டின் சீரமைப்பு பணி நடந்தது. இச்சீரமைப்பினால் சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சியடைந்ததுடன் மேக்காமண்டபத்துக்கும் முட்டைக்காட்டுக்கும் இடையில் ரோட்டில் ஆங்காங்கே ஏற்பட்டிருக்கும் குண்டு குழிகளை சீரமைக்க வேண்டுமென எதிர் பார்த்துள்ளனர்.