ன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நீர் நிலைகளை தூர் வாரி சுத்தம் செய்து மழைத் தண்ணீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விவசாயம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகும். விவசாயம் செய்வதற்கு தண்ணீர் இன்றியமையாதது. ஆகவே தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்துதல் முக்கிய காரணியாக உள்ளது. எனவே தான் முன்னோர்கள் நீர் நிலைகளை உருவாக்கினார்கள் அவ்வாறு உருவாக்கப்பட்ட நீர் நிலைகள் தற்போது மண் நிரம்பி முட்கள், செடி, கொடிகள் வளர்த்து பயன்படாமல் உள்ளது. ஆகவே நீர் நிலைகளை தூர் வாரிசுத்தம் செய்து பாதுகாத்திடல் வேண்டும். பண்டைக் காலத்தில் விவசாயிகள் உருவாக்கிய நீர்நிலைகளை ஆண்டுதோறும் கோடை காலங்களில் தூர்வாரி சுத்தம் செய்து வந்தனர். அப்போது மழை காலங்களில் மழைத் தண்ணீர் தேங்கும். ஒரு ஆண்டிற்கு அந்த தண்ணீரை பயன்படுத்தி மூன்று பருவமும் விவசாயம் செய்து வந்தனர். விளைச்சல் அதிகரித்தது.
தற்போதைய அரசு அதிகாரிகள் நீர் நிலைகளை கோடை காலங்களில் தூர்வாரி சுத்தம் செய்வதில்லை. ஆகவே நீர் நிலைகளில் மண் நிரம்பி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. அவ்வாறான சூழ்நிலைகளில் நீர் நிலைகளில் படிந்துள்ள மண் குத்தகைக்கு விற்பார்கள். குத்தகைக்கு எடுக்கும் நபர் நீர் நிலைகளில் படிந்துள்ள மண்ணினை எடுத்து விற்பனை செய்வார். நீர் நிலைகளை சுத்தம் செய்ய மாட்டார். அப்போது குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் இதனால் அந்த நீர் நிலைகளில் தேங்கியுள்ள நீரில் மக்கள் குளிப்பதற்கும், கன்றுகளை குளிப்பாட்டவும் முடியாமல் போய்விடுகிறது. நீர் நிலைகளை மக்கள் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது. இதனைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் கோழி இறச்சி கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுகின்றனர். நீர் நிலைகள் சாக்கடை நீராக காட்சி அழிக்கிறது. இவ்வாறான சூழ் நிலைகளை மாற்றி அமைக்க குளங்களை தூர் வாருகின்ற போது சுத்தமாக தூர் வாரி சுத்தம் செய்தால் பொதுமக்கள் பயன் அடைவர். தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படும். இதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் எடுப்பார்களா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.