அருவிக்கரை ரேசன் கடையில் இரவு முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு
Views - 265 Likes - 0 Liked
-
ரேஷன் கடைகளில் பொருள்கள் விநியோகத்தை முறைப்படுத்தவும், முறைகேடுகளை தடுக்கவும் விரல்ரேகை பதிவை அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார்750 ரேஷன்கடைகளுக்கும் பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவைகள் இருந்தால் ரேசன் பொருட்கள் முறையாகவும் விரைவாகவும் வழங்கமுடியும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தாணிவிளையில் அமைந்துள்ள அருவிக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட நியாயவிலை கடையில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தாமதம ஏற்பட்டது.
இரவு நேரத்திலும் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் ரேசன் பொருட்கள் கிடைக்காததால் நேற்றுமுந்தினம் இரவு ஆத்திரம் அடைந்த. அப்பகுதி மக்கள் திடீர் முற்றுகை இட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது எனவே இதுபோன்று பயோ மெட்ரிக்முறை என்பது கிராம பகுதிகளுக்கு மிஷன் தகராறு மற்றும் நெட் கனெக்ஜன் பழுதுகள் அடிக்கடி ஏற்படுவதால் மக்கள் ரேசன் உள்ளிட்ட பொருட்களை வாங்க மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர் என்றும், தற்போது இந்த ரேசன்கடையில் டோக்கன் முறையாக வழங்கப்படாமலும் வங்கி பணியாளர்கள் உள்ளிட்ட வெளி தனிநபர்கள் தலையீடுகள் அதிகரித்து வருகின்றது.
இதனால் டோக்கன் வழங்குவதிலும் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதனை பல முறை வட்டவழங்கள் அலுவலத்தில் புகார் அளித்தும் பயனில்லை என அங்கு குவிந்த மக்கள் தெரிவித்தனர்.
News