தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மணல் திட்டு அகற்றும் பணி தொடக்கம்
Views - 275 Likes - 0 Liked
-
கருங்கல்: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் திங்கள்கிழமை மணல் திட்டுகளை அகற்றும் பணித் தொடங்கியது. இப்பணியினை எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் முகப்பு பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தால் மணல் குவியல் ஏற்படுகிறது. இதனால்,இப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடா்ந்து
நிகழ்ந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் மீனவா்களின் கோரிக்கையின்படி ரூ. 1.60 கோடி மதிப்பில் மணல் குவியலை அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இப்பணியினை கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.
அவருடன் அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான், மீனவா் காங்கிரஸ் பொதுச்செயலா் கிறிஸ்டோபா், துணைத் தலைவா் வில்பிரட், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் பால்மணி, முன்சிறை வட்டார காங்கிரஸ் தலைவா் பால்ராஜ் உள்பட பலா் உடனிருந்தனா்.
News