கன்னியாகுமரி அருகே கரைஒதுங்கிய மீன்பிடி படகு
Views - 268 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி அருகே கரை ஒதுங்கிய மீன்பிடிபடகினை கடலோர பாதுகாப்பு படை போலீசார் மீட்டனர். கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் உத்தரவின் பேரில் சிறப்பு-சப்இன்ஸ்பெக்டர் நீலமணி மற்றும் போலீசார் கோவளம் முதல் மணக்குடி வரை ரோந்து பணியில் இருந்தபோது துவரகாபதி கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் வள்ளமும் வலையும் காணப்பட்டது.
இதனையடுத்து கோவளம் ஊர் மக்கள் உதவியுடன் கைப்பற்றி அதன்பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது மணக்குடியை சேர்ந்த போனிபாஸ் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. போலீசார் மேலும் விசாரித்தபோது மணக்குடி காயலில் கட்டப்பட்டிருந்த வள்ளம் காற்றும் கடல் அலையும் அதிகமாக இருந்ததால் அறுந்து வந்து கோவளம் பகுதியில் கரை ஒதுங்கியது தெரியவந்தது. இதனையடுத்து விசாரணைக்கு பின்னர் மணக்குடி மீனவர் போனிபாஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
News