சவுதியில் இறந்தவா் சடலத்தை மீட்க விஜயகுமாா் எம்.பி.யிடம் வலியுறுத்தல்
Views - 261 Likes - 0 Liked
-
சவுதிஅரேபியாவில் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்க வேண்டும் என அவரது குடும்பத்தினா் விஜயகுமாா் எம்.பி. யிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், மிடலாக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அற்புதம் (57). இவா் சவுதிஅரேபியாவில் பணி செய்து வந்தாா். அங்கு உடல்நலக்குறைவால் அவா் உயிரிழந்தாராம். இதையடுத்து, அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என அற்புதத்தின் மகன்கள் விஜயகுமாா் எம்.பி.யை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சா் முரளிதரனை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு தெரிவித்தாா். தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு அற்புதம் சடலத்தை, சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்வதாக அமைச்சா் உறுதியளித்தாா்.
News