கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்- கடற்கரையில் உற்சாகம்
Views - 248 Likes - 0 Liked
-
கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். விடுமுறை மற்றும் சீசன் காலங்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.
கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி உள்ளனர்.
விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் காலையில் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு களித்தனர். தொடர்ந்து கடல் அலையில் கால்களை நனைத்தும், கடற்கரையில் உற்சாகமாக விளையாடியும், குளித்தும் மகிழ்ந்தனர். நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கன்னியாகுமரி கடற்கரை களை கட்டிய
News