நெடுஞ்சாலைத்துறை- மாநகராட்சியை கண்டித்து தி.மு.க. சார்பில் 28-ந்தேதி ஆர்ப்பாட்டம்
Views - 40 Likes - 0 Liked
-
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் போக்குவரத்துக்கு பயனற்ற வகையிலும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையிலும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிர்ச்சேதங்களும் ஏற்படுகிறது.
எனவே பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக்கூறியும், மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே நகரின் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து சாலைகளையும் உடனடியாக செப்பனிடவில்லை என்றால் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வருகிற 28-ந் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
News