‘நிவர்’ புயல் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய ராணுவம்
Views - 24 Likes - 0 Liked
-
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் இன்று மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரு நாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர பகுதிகளில், ‘நிவர்’ புயல் பாதிப்பில் இருந்து மக்களை காக்க 5 வெள்ள மீட்பு குழுவினர் மற்றும் நீச்சல் குழுவினர் தயராக உள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்காக ஐ.என்.எஸ். ஜோதி கப்பல் நிறுத்தப்படும் என தெரிவித்திருந்தது.இதனை தொடர்ந்து, ‘நிவர்’ புயலால் பாதிப்பு ஏற்பட்டால், உதவி செய்வதற்கு தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு 12 பேரிடர் மீட்பு குழுக்கள், 2 பொறியாளர் குழுக்கள் தயாராக உள்ளதாகவும் இந்திய ராணுவம் கூறியுள்ளது.மேலும் புயல் பாதிப்பின் போது தொலை தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட வாய்ப்பிருப்பதால், தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலவரங்கள் குறித்து மாநில, மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளில் உள்ள அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டறிந்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.News