3வது டெஸ்ட்: உணவு இடைவேளை-இந்தியா 206/3; 64 பந்துகளில் அரை சதம் அடித்து பண்ட் அபாரம்
Views - 260 Likes - 0 Liked
-
சிட்னி,இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் விளாசிய சதத்தின் உதவியுடன் 338 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் அஜிங்யா ரஹானே (5 ரன்), புஜாரா (9 ரன்) களத்தில் இருந்தனர்.இந்த நிலையில் 3-வது நாளான நேற்று முன்தினம் இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். ரஹானே 22 ரன்கள் (70 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தபொழுது, கம்மின்ஸ் வீசிய பந்தில் போல்டானார். தொடர்ந்து வந்த விஹாரி 38 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். பின்பு புஜாராவுடன், பண்ட் கைகொடுத்து விளையாடினார்.இதன்பின், உணவு இடைவேளை விடப்பட்டது. 79 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் சேர்ந்து இருந்தது. புஜாரா 42, பண்ட் 29 ரன்கள் எடுத்திருந்தனர். இந்திய அணி 45.5வது ஓவரில் 100 ரன்களும், 69.3வது ஓவரில் 150 ரன்களும் எடுத்திருந்தது.ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர்.இதன் பின்னர் பண்ட் கொஞ்சம் வேகமாக ரன் திரட்டினார். மறுமுனையில் ரொம்பவே பொறுமையை கடைப்பிடித்த புஜாரா 174 பந்துகளில் தான் அரைசதம் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது மெதுவான அரைசதம் இது தான். அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்ட இந்த ஜோடி பிரிந்ததும் நிலைமை தலைகீழானது. ஸ்கோர் 195 ரன்களை எட்டிய போது ரிஷாப் பண்ட் (36 ரன், 67 பந்து, 4 பவுண்டரி) ஹேசில்வுட்டின் பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்ற வார்னரிடம் பிடிபட்டார். அடுத்த ஓவரில் புஜாரா (50 ரன், 176 பந்து, 5 பவுண்டரி) கம்மின்சின் பந்து வீச்சில் வீழ்ந்தார். கடைசி கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா (28 ரன், 37 பந்து, 5 பவுண்டரி) தவிர வேறு யாரும் தாக்குப்பிடிக்கவில்லை.முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 100.4 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கடைசி 49 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் சாய்த்தனர். ஆஸ்திரேலிய பவுலர்கள் மொத்தம் 37 ஓவர்களை மெய்டனாக வீசி இந்தியாவின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினர்.இதன்பின்னர் 94 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வில் புகோவ்ஸ்கி (10 ரன்), டேவிட் வார்னர் (13 ரன்) இருவரும் சொற்ப ரன்களில் வெளியேற்றப்பட்டனர். வார்னர், அஸ்வினின் சுழற்பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால் 3-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த மார்னஸ் லபுஸ்சேனும், ஸ்டீவன் சுமித்தும் அடித்து விளையாடினர்.ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 29 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்து மொத்தம் 197 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை அடைந்துள்ளது. லபுஸ்சேன் 47 ரன்களுடனும் (69 பந்து, 6 பவுண்டரி), சுமித் 29 ரன்களுடனும் (63 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.நேற்று 4வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. இதில், லபுஸ்சேன் 73 (118 பந்துகள், 9 பவுண்டரிகள்) ரன்களில் விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வேட் 4 (11 பந்துகள், 1 பவுண்டரி) சஹாவிடம் கேட்சாகி ஆட்டமிழந்து உள்ளார்.பண்ட்க்கு பதிலாக களமிறக்கப்பட்ட சஹா தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டார். சைனி பந்து வீச்சில் கிடைத்த 2 கேட்சுகளையும் தவற விடாமல் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா உணவு இடைவேளை வரை 64 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளுக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 58 (155 பந்துகள் 5 பவுண்டரிகள்), கிரீன் 20 (58 பந்துகள் 3 பவுண்டரிகள்) எடுத்திருந்தனர்.ஆட்டம் மீண்டும் தொடங்கிய பின்பு, இருவரும் ரன்களை குவித்தனர். இதில், ஸ்மித் (81), கிரீன் (84) என இரண்டு பேட்ஸ்மேன்களும் அரை சதம் கடந்து ஆட்டமிழந்தனர்.இந்த போட்டியில் சஹா 4 கேட்சுகளை பிடித்து விக்கெட்டுகளை எடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். அந்த அணி 87 ஓவர்களில் 6 விக்கெட்டுகளுக்கு 312 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் டிக்ளேர் என அறிவிக்கப்பட்டது. பெய்னி (39) ஆட்டமிழக்காமல் உள்ளார்.இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது.முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 34 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா (52), கில் (31) ரன்களில் ஆட்டமிழந்தனர். புஜாரா (9), ரஹானே (4) ரன்கன் எடுத்திருந்தனர்.இதன்பின் 5வது மற்றும் இறுதி நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. இதில், லயான் வீசிய பந்தில் வேடிடம் கேட்ச் கொடுத்து ரஹானே 4 ரன்களில் வெளியேறினார். இன்றைய ஆட்டத்தில் களமிறங்கிய பண்ட் அதிரடியாக விளையாடி 64 பந்துகளில் அரை சதம் விளாசியுள்ளார். உணவு இடைவேளைவரை 70 ஓவர்களில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா (41) மற்றும் பண்ட் (73) ரன்கள் எடுத்துள்ளனர்.News