இந்தியா-இங்கிலாந்து: 3வது, 4வது டெஸ்ட் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி
Views - 24 Likes - 0 Liked
-
புதுடெல்லி,இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவற்றில், முதல் 2 போட்டிகள் சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும்.இதன்படி முதல் போட்டி வருகிற 5ந்தேதியும், 2வது போட்டி வருகிற 13ந்தேதியும் நடைபெறுகிறது. கொரோனா பாதிப்புகளால் சென்னை அதிகம் பாதிக்கப்பட்ட சூழலில் ரசிகர்களை அனுமதிப்பது சந்தேக நிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து விளையாடும் 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.இதனை பி.சி.சி.ஐ. அதிகாரி இன்று உறுதிப்படுத்தி உள்ளார். 3வது டெஸ்ட் பகல் இரவு போட்டியாக ஆமதாபாத் நகரில் உள்ள மோதேரா ஸ்டேடியத்தில் நடைபெறும். இதே ஸ்டேடியத்தில் 4வது போட்டியும் நடைபெற உள்ளது.இந்த இரு ஸ்டேடியங்களிலும் போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்களை நாங்கள் வரவேற்கிறோம் என அவர் கூறியுள்ளார். இதில், புதுப்பிக்கப்பட்ட மோதேரா ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி அழைக்கப்படுவாரா? என்ற செய்தியாளர் கேள்விக்கு உறுதிப்பட என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.இதேபோன்று தமிழ்நாடு கிரிக்கெட் கூட்டமைப்பு மற்றும் பி.சி.சி.ஐ. இடையேயான பேச்சுவார்த்தையில் வெற்றி கிட்டுமெனில் 2வது டெஸ்டில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைக்கும்.News