இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Views - 268 Likes - 0 Liked
-
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,80,603 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,55,447 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,858 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,05,89,230 ஆக உயர்ந்துள்ளது.மேலும் கொரோனா தொற்றுக்கு 1,35,926 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் 75,05,010 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.News