சட்டமன்ற தேர்தலையொட்டி, 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு
Views - 239 Likes - 0 Liked
-
வேளாண்துறை இணைச் செயலாளராக இருந்த ஆனந்த் ஐஏஎஸ் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை இணைச் செயலாளராக இருந்த அஜய் யாதவ் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளை கவனமாக கண்காணிப்பதற்காக இரு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடு பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று மாலை 4 மணிக்கு காணொலியில் தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News