கடல் அட்டைகள் பிடித்ததாக குமரி மீனவர் உள்பட 4 பேர் கைது
Views - 261 Likes - 0 Liked
-
லட்சத்தீவு பகுதியில் கடல் அட்டைகளை பிடித்ததாக கைது செய்யப்பட்ட குமரி மாவட்ட மீனவர் உள்பட 4 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நித்திரவிளை அருகே கோடிமுனை பகுதியை சேர்ந்த ஜூலியஸ் நாயகம் (வயது 51), கேரள மாநிலம் திருவனந்தபுரம் மரியநாடு பகுதியை சேர்ந்த ஷாஜன் (28). இவர்கள் இருவரும் சேர்ந்து தூத்தூர் பகுதியை சேர்ந்த ரூபன் என்பவருக்கு சொந்தமான ரெக்ஸிகா என்ற விசைப்படகை மாதத்திற்கு ரூ.75 ஆயிரம் வாடகை என ஒப்பந்த அடிப்படையில் எடுத்து லட்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து விற்பனை செய்து வந்தனர்.இந்தநிலையில், கடந்த 2-ந் தேதி ஜூலியஸ் நாயகம் மற்றும் ஷாஜன் ஆகியோருடன் வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரும் சேர்ந்து கொச்சி துறைமுகத்தில் இருந்து லட்சத்தீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அங்கு கடந்த 10 நாட்களாக தங்கி இருந்து மீன்பிடித்து வந்த நிலையில் திடீரென இந்த மீனவர்களின் விசைப்படகை லட்சத்தீவு கடற்படையினர் சிறைப்பிடித்து படகில் இருந்த குமரி மீனவர் ஜூலியஸ் நாயகம் உள்பட 4 பேரையும் கைது செய்துள்ளனர்.இவர்கள் அந்த பகுதியில் தடைசெய்யப்பட்டுள்ள குக்கும்பர் எனப்படும் கடல் அட்டைகளை பிடித்து கடத்தி வந்து விற்பனை செய்ததாகவும், அதனை அறிந்து லட்சத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.தற்போது இந்த மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் மீனவரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். லட்சத்தீவு பகுதியில் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்து, அவர்களது படகையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு தூத்தூர் மண்டல மீனவ சங்க தலைவர் ஜோஸ் பில்பின் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.News