லண்டன் டெஸ்ட்: மழை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் ரத்து
Views - 245 Likes - 0 Liked
-
லண்டன்,இங்கிலாந்துக்கு சென்றுள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.Xஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தயாராவதற்கு நியூசிலாந்து அணிக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இதன்படி இங்கிலாந்து-நியூசிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேட்பன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 378 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டெவென் கான்வே அதிகபட்சமாக 200 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ராபின்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனை தொடர்ந்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை நேற்று முன்தினம் தொடங்கியது. அந்த அணியின் தொடக்க 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணியின் ராய் 59 ரன்னிலும், கேப்டன் ரூட் 42 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்தை விட 267 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து உள்ளது.இந்நிலையில், டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆனால், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே கனமழை பெய்து வந்தது. இதனால், போட்டி தடைபட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் 3-ம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒரு பந்து கூட வீசப்படாமல் 3-ம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.கனமழை காரணமாக 3-ம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் போட்டியை காண வந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.News