டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று ஆலோசனை
Views - 217 Likes - 0 Liked
-
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் போட்டி தேர்வுகளை நடத்தாமல் உள்ளது. 2019ஆம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மட்டும் அவ்வப்போது நடைபெற்ற வந்தன.இந்நிலையில், குரூப்-2, குரூப்-4 தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.இதில், குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட 38 வகையான தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து தேர்வுகளின் தேதி இறுதி செய்யப்படும் என தெரிகிறது. மேலும், அனைத்துவகை தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.News