பாகிஸ்தான் வீரர்களை புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட காஷ்மீர் மாணவர்கள் இடை நீக்கம்
Views - 210 Likes - 0 Liked
-
துபாயில் நடந்து வருகிற 20 ஓவர் உலக கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இது நாடு முழுவதும் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பாகிஸ்தான் வெற்றியை ஜம்மு காஷ்மீரில் சிலர் கொண்டாடி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதற்காக ஜம்மு காஷ்மீரில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை புகழ்ந்து வாட்ஸ் அப்பில் பதிவிட்டதாக ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆக்ரா அருகே உள்ள பிச்பூரியில் ராஜா பல்வந்த் சிங் இன்ஜினியரிங் கல்லூரி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு எதிராக உள்ளூர் பாஜக இளைஞர் பிரிவும் புகார் அளித்துள்ளது. எனினும், மாணவர்கள் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.News