#லைவ் அப்டேட்ஸ்: அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து ரஷியா விலகல் ; ஜப்பான் கண்டனம்
Views - 205 Likes - 0 Liked
-
உக்ரைன் மீது ரஷியா 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-மார்ச் 22, 11.11 AMமார்ச் 22, 10.33 AMமார்ச் 22, 10.10AMபத்திரிகையாளர்கள் கைதுரஷிய படைவீரர்கள் உக்ரைனில் உள்ள ஜபோரிஜ்ஜியா நகரின் உள்ளூர் பத்திரிகையாளர்களை கைது செய்து குறிப்பிட்ட பத்திரிக்கையின் இணையதளத்தை முடக்கியதாக ஆஸ்ட்ரோ செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.மேரியோபோல் நகரத்தில் மோசமான சூழ்நிலை தொடர்ந்து வருகிறது. தீவிரமான குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு மத்தியில், மின்சாரம், உணவு, தண்ணீர் இன்றி 3,00,000 பேர் சிக்கியுள்ளனர். மேலும், 90 சதவீத கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.மார்ச் 22, 10.05AMஅமைதி பேச்சுவார்த்தையில் இருந்து ரஷியா விலகல் ஜப்பான் கண்டனம்உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு எதிராக டோக்கியோ விதித்த பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேச்சுவார்த்தையில் இருந்து விலக ரஷியா முடிவு எடுத்துள்ளது. இதற்குஜப்பான் கண்டனம் தெரிவித்து உள்ளது.76 ரஷிய நபர்கள், ஏழு வங்கிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசுக்கு சொந்தமான ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபோரோனெக்ஸ்போர்ட் உட்பட 12 பிற அமைப்புகள் மீது ஜப்பான் தடைகளை விதித்துள்ளது.மார்ச் 22, 9.16 AMமார்ச் 22, 08.16 AMமார்ச் 22, 07.07 AMமார்ச் 22, 5.40 AMமார்ச் 22, 05.30 AMபெர்டியன்ஸ்கில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்: மரியுபோல் நகர சபைமேலும் 4,384 மரியுபோல் குடியிருப்புவாசிகள் துறைமுக நகரமான பெர்டியன்ஸ்கில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக மரியுபோல் நகர சபை தெரிவித்துள்ளது.உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர். அந்த வணிக வளாகத்தை உக்ரைன் ராணுவத்தினர் ராக்கெட் அமைப்புகளை சேமிக்க பயன்படுத்தி வந்ததாக ரஷிய படையினர் தெரிவித்துள்ளனர்.மார்ச் 22, 4.34 AMமார்ச் 22, 04.30 AMபிடிபட்ட 500 க்கும் மேற்பட்ட உக்ரைனியர்களை இடமாற்றம் செய்ய தயாராக இருப்பதாக ரஷியா கூறுகிறது.பிடிபட்ட 500 க்கும் மேற்பட்ட உக்ரைனியர்களின் விவரங்களை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு ரஷியா அனுப்பியுள்ளது என்று இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் ரஷியாவின் மனித உரிமைகள் ஆணையரை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.மார்ச் 22, 03.30 AMஉக்ரைனில் போர் வலுத்து வரும் சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வருகிற 25-ந்தேதி போலந்துக்கு செல்ல உள்ளார். அங்கு அவர் தலைநகர் வார்ஷாவில் அந்த நாட்டின் அதிபர் ஆண்ட்ரெஜ் டுடாவை நேரில் சந்தித்து போர் நிலவரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.இதுதொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-ஜனாதிபதி ஜோ பைடன், முதற்கட்டமாக வருகிற 24-ந்தேதி பெல்ஜியம் செல்கிறார். அங்கு தலைநகர் பிரஸ்சல்சில் நேட்டோ தலைவர்கள், ஜி7 தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்திக்கிறார்.அவர்களுடன் ரஷியாவின் மீதான பொருளாதார தடைகள் மற்றும் ரஷியாவின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான உக்ரைன் மக்களுக்கான மனிதாபிமான முயற்சிகள் குறித்து முக்கிய ஆலேசானைகளை மேற்கொள்கிறார்.அதனை தொடர்ந்து 25-ந்தேதி அவர் போலந்து செல்கிறார். உக்ரைனில் ரஷிய தாக்குதலால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி குறித்து அந்த நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். உக்ரைனுக்கான உலக நாடுகளின் ஆதரவை நிரூபிக்கும் வகையில் இந்த சந்திப்பு அமையும். அதே வேளையில் ஜோ பைடன் உக்ரைனுக்கு செல்லும் திட்டம் ஏதுமில்லை.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மார்ச் 22, 02.30 AMரஷியாவுடனான போர் சமாதான முடிவுக்கு வர வேண்டும் என்றால் உக்ரைனியர்கள் வாக்கெடுப்பில் வாக்களிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் எந்த வகையான சமாதானதிற்கு மக்கள் பேச வேண்டும் என்பதை அதில் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.கார்கிவ், மரியுபோல் மற்றும் கீவ் நகரங்களை ஒப்படைக்க வேண்டும் என்று, மாஸ்கோ இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.முதலில் அவர்கள் எங்களை அழித்த பின்னரே ரஷியாவின் இறுதி எச்சரிக்கை நிறைவேறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.மார்ச் 22, 01.30 AMஉக்ரைன் மீதான ரஷியாவின் போரை முடிவுக்கு கொண்டுவர இருநாடுகளுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய தயராக இருப்பதாக சுவிட்சர்லாந்து அதிபர் இக்னாசியோ காசிஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், “உக்ரைன் நெருக்கடிக்கு தீர்வுகாண மத்தியஸ்தராக செயல்படவும், உக்ரைன்-ரஷியா இடையிலான சமரச பேச்சுவார்த்தையை நடத்தவும் சுவிட்சர்லாந்து தயாராக உள்ளது. சுவிட்சர்லாந்து நடுநிலை மற்றும் மனிதாபிமான பாரம்பரியம் இரண்டையும் கொண்டுள்ளது” என கூறினார்.மார்ச் 22, 00.30 AMஉக்ரைனில் கிழக்கு பகுதியில் சுமி நகரில் உள்ள ரசாயன ஆலை மீது நேற்று அதிகாலை ஏவுகணை வீசப்பட்டது. இதில் அந்த ஆலையில் பெரும் சேதம் ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.இதை தொடர்ந்து ரசாயன ஆலையில் இருந்து அமோனியா வாயு கசிந்து 5 கி.மீ. தொலைவுக்கு காற்றில் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே சிட்ரிக் அமிலத்தில் ஊறவைத்த காஸ் பேண்டேஜ்கள் மூலம் சுவாசிக்குமாறு சுமி நகர மக்களை அதிகாரிகள் வலியுறுத்தினர்.அதே சமயம் ரசாயன தாக்குதல் நடத்தியதாக ரஷியா மீது பொய் குற்றச்சாட்டை முன்வைக்க உக்ரைன் அரசு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதாக பொய் கூறுவதாக ரஷிய ராணுவம் தெரிவித்தது.மார்ச் 21, 23.30 PMகெர்சனில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரஷியா ஒரு போர்க்குற்றவாளி என உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில்,கெர்சனில், ரஷியா படைகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய நிராயுதபாணி மக்கள் மீது ரஷிய போர்க் குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காயமடைந்த அப்பாவி மக்களை நீங்கள் காணலாம். இது ரஷியாவின் அசிங்கமான முகம், மனித குலத்திற்கு பெருத்த அவமானம். நாம் ரஷியாவின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும். அவர்களை தடை விதிக்கவும் தனிமைப்படுத்தவும், போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.In Kherson, Russian war criminals opened fire at unarmed people who peacefully protested against invaders. You can see a wounded pensioner. This is the ugly face of Russia, a disgrace to humankind. We must stop Russia! Sanction them, isolate them, hold war criminals to account. pic.twitter.com/WeItSykD3q— Dmytro Kuleba (@DmytroKuleba) March 21, 2022மார்ச் 21, 22.35 PMரஷியா ஷெல் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக கீவ் நகரில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கெய்வ் மேயர் தெரிவித்துள்ளார்உக்ரைன் தலைநகரில் நீண்ட நேரம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதாக கிய்வ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறியுள்ளார். ஏனெனில் உள்ளூர் அதிகாரிகள் ரஷிய படைகளால் மேலும் தாக்குதல்களை சந்திப்பதால் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் 21, 9.30 PMஉக்ரைன் - ரஷியா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளில் சீனா முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என்று உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.மார்ச் 21, 8.30 PMஇன்ஸ்டகிராம், பேஸ்புக்கிற்கு ரஷிய நீதிமன்றம் தடைமெடா நிறுவனங்களின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தீவிரவாத தன்மையுடன் இருக்கக் கூடும் எனக்கூறி, இரு சமூக வலைத்தளங்களுக்கும் ரஷிய கோர்ட் தடை விதித்துள்ளது.மார்ச் 21, 7.15 PMமரியுபோல் நகரில் சரண் அடையும் பேச்சுக்கே இடம் இல்லை: உக்ரைன்மரியுபோல் நகரை சுற்றி வளைத்துள்ள ரஷிய படைகள், அந்நகரில் உள்ள உக்ரைன் படைகள் ஆயுதங்களை கைவிட்டு விட்டு சரண் அடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துள்ள உக்ரைன், சரண் அடையும் பேச்சுக்கே இடம் இல்லை என்று தெரிவித்துள்ளது.மார்ச் 21, 6.00 PMஅமைதிப் பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை; ரஷியாரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் இன்னும் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று ரஷிய செய்தி தொடர்பாலர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய நாடுகள், பேச்சுவார்த்தைகளில் உக்ரைனை இன்னும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.மரியுபோல் நகரை சுற்றிவளைத்த ரஷிய படைகள் உக்ரைன் வீரர்கள் சரணடைய மறுப்புஉக்ரைனின் மரியுபோல் நகரை ரஷிய படைகள் சுற்றிவளைத்துள்ள நிலையில் அவர்களிடம் சரணடைய உக்ரைன் வீரர்கள் மறுத்து விட்டனர்.ரஷியாவின் ஒரே இலக்குஉக்ரைன் மீதான போருக்கு ரஷியா பல்வேறு காரணங்களை கூறினாலும், உக்ரைன் தன்னிடம் மண்டியிட வேண்டும் என்பதுதான் ரஷியாவின் ஒரே இலக்கு.அதை முன்வைத்தே ரஷிய படைகள் உக்ரைன் நகரங்கள் மீதான தாக்குதல்களை நாளுக்குநாள் தீவிரப்படுத்தி வருகின்றன. உக்ரைனில் பாதுகாப்பான இடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பெரிய நகரங்கள் தொடங்கி சிறிய நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் ரஷிய படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.அதே சமயம் உக்ரைனின் தென்கிழக்கு துறைமுக நகரமான மரியுபோல் ரஷியாவின் பிரதான இலக்காக உள்ளது. மரியுபோல் நகரை கைப்பற்றினால் ரஷிய படைகள் கிரிமியாவுக்கு தரை மார்க்கமாக வந்து செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.பூமியில் ஒரு நரகமாக...இதனால் தொடர்ந்து 3 வாரமாக மரியுபோல் நகரம் மீது ரஷிய படைகள் இடைவிடமால் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் அந்த நகரம் பூமியில் ஒரு நரகமாக மாறி வருகிறது.அந்த நகரில் உள்ள ஒவ்வொரு வீதியிலும் குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடுகள் கேட்டவண்ணம் உள்ளன. அங்குள்ள குடியிருப்பு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் என எதையும் விட்டு வைக்காமல் ரஷிய படைகள் குண்டுகளை வீசி வருகின்றன.இதில் மரியுபோல் நகரில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் எலும்புகூடுகளாக காட்சி அளிக்கின்றன.உக்ரைன் வீரர்களுக்கு ரஷியா கெடுமரியுபோலில் உள்ள சுமார் 4 லட்சம் மக்கள் சொற்பமான உணவு, குடிநீருடன் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.ரஷிய படைகள் மரியுபோல் நகரை சுற்றிவளைத்து இரவு, பகல் பாராமல் தாக்குதல்களை நடத்தி வருவதால் அந்ந நகரில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.இந்த நிலையில் மரியுபோல் நகரில் இருக்கும் உக்ரைன் ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தங்களிடம் சரணடைந்தால் அந்த நகரம் பேரழிவில் இருந்து தப்பிக்கும் என கூறிய ரஷியா, உக்ரைன் வீரர்கள் சரணடைய காலக்கெடுவும் விதித்தது.ஆனால் மரியுபோல் நகரை விட்டுக்கொடுத்துவிட்டு சரணடைய முடியாது என தெரிவித்த உக்ரைன் வீரர்கள், கடைசி வரை சண்டையிடுவோம் எனவும் சூளுரைத்துள்ளனர்.சரணடையும் பேச்சுக்கே இடமில்லைஇதுகுறித்து உக்ரைன் துணை பிரதமர் இரின வெரெஸ்சுக் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “ஆயுதங்களை விடுத்து சரணடையும் பேச்சுக்கே இடமில்லை. இதை நாங்கள் ஏற்கெனவே ரஷிய தரப்புக்கு தெரிவித்துவிட்டோம்” என்றார்.உக்ரைன் வீரர்கள் சரணடைய மறுத்தது குறித்து ரஷியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே வேளையில் மரியுபோல் நகரில் 1 லட்சம் 30 ஆயிரம் பொதுமக்களை உக்ரைன் அதிகாரிகள் பிணைக்கைதிகளாக வைத்துள்ளதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது. இதில் 6 நாடுகளை சேர்ந்த 184 வெளிநாட்டு குடிமக்களும் அடங்குவர் எனவும் தெரிவித்துள்ளது.கடந்த 3 நாட்களில் மட்டும் மரியுபோல் நகரில் இருந்து 139 வெளிநாட்டினர் உள்பட 59 ஆயிரத்து 34 பேர் பாதுகாப்பாக வெளியே ரஷிய படைகள் உதவியதாகவும் ரஷிய ராணுவம் தெரிவித்தது.பள்ளிக்கூடம் மீது குண்டு வீச்சுஇதனிடையே மரியுபோல் நகரில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட 400 பேர் தங்கியிருந்த பள்ளி மீது ரஷியா தாக்குதல் நடத்தியதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டடனம் தெரிவித்துள்ளார்News