மே 9-ஆம் தேதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா திட்டம்- உக்ரைன் ராணுவம் தகவல்
Views - 204 Likes - 0 Liked
-
உக்ரைனில் ரஷிய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு உக்ரைன் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த நிலையில் மே 9ம் தேதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா விரும்புவதாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக உக்ரைன் ஆயுதப் படைகளின் உளவுத்துறை தரப்பில் , " மே 9 ஆம் தேதி ரஷ்யா ஜெர்மனியை போரில் வென்ற நாளாக கொண்டாடப்படுகிறது. அதனால் மே 9 ஆம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ரஷியா தங்கள் நாட்டு ராணுவத்திடம் தெரிவித்துள்ளது" என கூறப்பட்டுள்ளது.News