தோவாளை பூ மார்க்கெட்டில் பிச்சி பூ விலை ரூ.125 உயர்வு கிலோ ரூ.750–க்கு விற்பனை
Views - 330 Likes - 0 Liked
-
தோவாளை பூ மார்க்கெட்டில் பிச்சி விலை ரூ.125 உயர்ந்தது.
பூ மார்க்கெட்
ஆரல்வாய்மொழி அருகே தோவாளை பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நெல்லை, மதுரை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்காக தினமும் அதிகாலையிலேயே லாரி, டெம்போ போன்ற வாகனங்களில் பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. இங்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாங்கிச் செல்ல வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ரூ.625–க்கு விற்கப்பட்ட பிச்சி நேற்று ரூ.125 உயர்ந்து ரூ.750–க்கு விற்பனையானது.
இதுகுறித்து பூ வியாபாரி ஒருவர் கூறும்போது கேரளாவில் நாளை மறுநாள் ஓணம் பண்டிகை கொண்டாட இருப்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை போல் கேரள வியாபாரிகள் பூக்களை கொள்முதல் செய்ய அதிக அளவில் வராததால் இந்த ஆண்டு பூ வியாபாரம் சற்று மந்தமாக உள்ளது என்று கூறினார்.
விலை விவரம்
தோவாளை பூ மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை (கிலோ) விவரம் வருமாறு:–
அரளி ரூ.120, மல்லிகை ரூ.400, கனகாம்பரம் ரூ.500, வாடாமல்லி ரூ.30, கேந்தி ரூ.40, சம்பங்கி ரூ.80, முல்லை ரூ.600, ரோஜா(100எண்ணம்)ரூ.20, பட்டன்ரோஸ் ரூ.100, துளசி ரூ.20, தாமரை(100எண்ணம்) ரூ.300, பச்சை ரூ. 5, கோழிப்பூ ரூ.30, கொழுந்து ரூ.50, மருக்கொழுந்து(கட்டு) ரூ.100, மஞ்சள் கேந்தி ரூ.40, சிவந்தி ரூ.80, வெள்ளை சிவந்தி ரூ.150, ஸ்டெம்புரோஸ்(1கட்டு) ரூ.150, மாம்பழ கேந்தி ரூ.25 என விற்பனையானது.News