சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உண்டியல் மூலம் ரூ. 8 லட்சம் வசூல்
Views - 205 Likes - 0 Liked
-
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உண்டியல் மூலம் ரூ. 8 லட்சம் வசூல் ஆனது.
தாணுமாலயசாமி கோவில்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். அவ்வாறு வருகிற பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலை சுற்றிலும் 13 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதுபோல் கடந்த ஜூலை மாதம் 14–ந் தேதி எண்ணப்பட்ட உண்டியல்கள் அனைத்தும் மீண்டும் நேற்று திறந்து எண்ணப்பட்டன.
ரூ. 8 லட்சம்
குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் பாரதி தலைமையில், உதவி ஆணையர் வெங்கடேஷ், முதுநிலை கணக்கு அலுவலர் இங்கர்சால், ஆய்வாளர் ஜலஜா குமாரி, கோவில் பணியாளர்கள் மற்றும் ஆதிபராசக்தி மகளிர் அணியினர் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது.
இதில் வருமானமாக ரூ.8 லட்சத்து 9 ஆயிரத்து 211 வசூலாகி இருந்தது. மேலும், 2 கிராம் 80 மில்லி தங்கமும், 15 கிராம் 200 மில்லி கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணங்களும் இருந்தன.News