காட்டாத்துறை ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தேர்ப்பவனி
Views - 230 Likes - 0 Liked
-
காட்டாத்துறை புனித அற்புத ஆரோக்கிய அன்னை ஆலய அர்ச்சிப்பு மற்றும் குடும்ப திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல்நாள் விழாவில் சுவாமியார் மடம் புனித யூதாதயு திருத்தல அதிபர் ஆண்ட்ரூஸ் சாந்த குமார் முன்னிலை வகிக்க குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல், திருக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர் புதிய ஆலயம் கட்ட நிலம் வழங்கியவர்கள், ஆலயம் கட்ட உதவி செய்தவர்களை பாராட்டினார். தமிழக கார்மல் சபை தலைவர் பெஞ்சமின் பிராங்கிளின் புதிய ஆலயத்தில் ரிப்பனை வெட்டி திறந்து வைத்தார். ஆலய கல்வெட்டினை மறைவட்ட அதிபர் ஹிலாரி திறந்து வைத்தார்.
2–ம் நாள் விழாவில் அருட்தந்தை கடாட்சதாஸ் திருப்பலி நிறைவேற்றி, அன்னையின் தேர்ப்பவனியை தொடங்கி வைத்தார்.
3–ம் நாள் விழாவில் நவநாள் திருப்பலியை முளகுமூடு மறைவட்ட அதிபர் ஹிலாரி நடத்தினார். அருட்தந்தை கிறிஸ்துதாஸ் மறையுரை வழங்கினார். பின்னர் பொதுக்கூட்டம் நடந்தது. நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.News