பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 10 அடியாக குறைந்தது
Views - 234 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் இம்மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க வேண்டும். ஆனால் இன்னும் தொடங்க வில்லை. இதனால் அணைகளில் உள்ள நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. எனவே குடிநீருக்கும், பாசனத்துக்கும் தண்ணீர் பிரச்சினை ஏற்படுமோ? என்ற அச்சம் பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 13.95 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 10 அடியாகவும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்–1 அணை நீர்மட்டம் 6.07 அடியாகவும், சிற்றார்–2 அணை நீர்மட்டம் 6.17 அடியாகவும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணையின் நீர்மட்டம் 10.70 அடியாகவும், 54 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 44.21 அடியாகவும் உள்ளன.
நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பொய்கை அணைப்பகுதியில் 3.6 மி.மீ. மழையும், கன்னிமார் பகுதியில் 1 மி.மீ. மழையும் பெய்திருந்தது. மற்ற பகுதிகளில் மழை இல்லை. பேச்சிப்பாறை அணைக்கு 204 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 432 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.News