கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் அன்னதான உண்டியலில் ரூ.33 ஆயிரம் காணிக்கை
Views - 235 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின் கீழ் அன்னதான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை இந்த உண்டியல் திறந்து எண்ணப்படும். இந்த உண்டியல் நேற்று திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் ஜலஜாகுமாரி, பகவதி அம்மன் கோவில் தலைமை கணக்கர் ஸ்ரீராமச்சந்திரன், முன்னாள் தலைமை கணக்கர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணப்பட்டது. அன்னதான உண்டியல் மூலம் ரூ.33 ஆயிரத்து 575 வசூலாகியிருந்தது.
News