இன்று முதல் ஏ.டி.எம்கள் திறக்கப்படுகின்றன: மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு
Views - 191 Likes - 0 Liked
-
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அவற்றை 10–ந் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வைத்து இருந்தவர்கள், நேற்று வங்கிகளுக்கு சென்று அவற்றை கொடுத்துவிட்டு வேறு ரூபாய் நோட்டுகளை வாங்க தொடங்கி இருக்கிறார்கள்.புதிய ரூபாய் நோட்டுக்களை வழங்குவதற்கு ஏதுவாக கடந்த இரண்டு நாட்களாக மூடப்படிருந்த ஏடிஎம்-கள் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.அதேபோல், ஏடிஎம் இயந்திரங்களில் தொழில்நுட்பப் பணி நடைபெற்று வருவதால், ரூ.2000 நோட்டுகள் வரத் தாமதமாகலாம். மேலும், தட்டுப்பாடு காரணமாக ரூ.500 நோட்டும் தற்போதைக்கு ஏடிஎம் மையங்களில் வராது. வங்கிகளில் மட்டுமே அவைகளை வாங்க முடியும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.எனவே, ஏடிஎம் மையங்களில் ரூ.100 மட்டுமே வரும் என தெரிகிறது.இன்று முதல் எடி.எம்.கள் திறக்கப்படும் என்ற தகவலால் நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள எடி.எம்.மையத்தின் முன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மும்பை, பெங்களூரு போன்ற முன்னணி நகரங்களில் காலையில் இருந்தே மக்கள் காத்திருக்கின்றனர். இதனால், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.News