ரூபாய் நோட்டு தட்டுப்பாடு: திருமணங்களுக்கு பாதிப்பு இல்லை சர்வேயில் அம்பலம்
Views - 192 Likes - 0 Liked
-
உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் மத்திய அரசு முடிவால், குறைந்த மதிப்பிலான நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக திருமண விழாக்கள் பாதிப்புக்குள்ளாகுமா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக ஆன்லைன் சர்வே ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் அம்பலத்துக்கு வந்துள்ள தகவல்கள்:-
* திருமணம் பாதிக்காது என 41 சதவீதம் ஆண்களும், 39 சதவீதம் ஆண்களும் கூறுகின்றனர்.
* திருமணம் பாதிக்கும் என 20.3 சதவீதம் ஆண்களும், 24.5 சதவீதம் பெண்களும் சொல்கின்றனர்.
* பாதிக்காது என கூறியவர்களிடம் காரணம் கேட்டபோது, 37 சதவீதம் பேர் ஏற்கனவே ஏற்பாடுகள் செய்தாகி விட்டது எனவும், 35 சதவீதம்பேர் சிக்கனமான திருமணம் என்றும், மீதிப்பேர் பதிவுத்திருமணம் என்றும் கூறி உள்ளனர்.
* பண ஒழிப்பினால் திருமண பாதிப்புக்கு ஆளாவோர், முன்கூட்டியே திட்டமிடாதவர்கள், செலவுக்கு போதிய கையிருப்பு பணம் வைத்திருக்காதவர்கள்.
* பண தட்டுப்பாடு காரணமாக 17.8 சதவீதம் ஆண்களும், 7.6 சதவீதம் பெண்களும் திருமண திட்டத்தை ரத்து செய்து விட்டனர்.
இந்த சர்வேயில் 25-32 வயதுக்கு உட்பட்ட 13 ஆயிரத்து 200 பேர் பங்கேற்றனர்.News