ஆதார் எண் இணைக்காத ரேஷன்கார்டுகள் தற்காலிக நீக்கம்: வட்ட வழங்கல் அலுவலகத்தில் 2–வது நாளாக திரண்ட பொதுமக்கள்
Views - 232 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்களை இணைக்காத 29 ஆயிரத்து 760 ரேஷன் கார்டுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் அந்தந்த தாலுகாவுக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் திரண்டு, ரேஷன்கார்டுகளை செயல்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதேபோல் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று 2–வது நாளாக பொதுமக்கள் திரண்டனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து கார்டுதாரர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். நேற்று முன்தினம் விண்ணப்பித்த 248 பேர் விண்ணப்பங்கள் மீதான விசாரணையை வருவாய் ஆய்வாளர்கள் நேரடியாக மேற்கொண்டனர்.
News