பொங்கல் பண்டிகைக்கு வழங்க குமரி மாவட்டத்துக்கு 3¾ லட்சம் இலவச வேட்டி– சேலைகள் வந்தன
Views - 229 Likes - 0 Liked
-
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஏழை, எளியவர்களுக்கு இலவச வேட்டி– சேலைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு ஆகிய 4 தாலுகாக்களையும் சேர்ந்த 4 லட்சத்து 30 ஆயிரத்து 295 ஆண்களுக்கும், 4 லட்சத்து 31 ஆயிரத்து 839 பெண்களுக்குமாக மொத்தம் 8 லட்சத்து 62 ஆயிரத்து 134 பேருக்கு இலவச வேட்டி– சேலைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படுவதற்கான வேட்டி– சேலைகள் குமரி மாவட்டத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொரு தாலுகாவிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகின்றன. நேற்றும் நாகர்கோவிலுக்கு ஒரு லாரி இலவச வேட்டி– சேலைகள் வந்தன. அவை நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டன.
இதுவரை குமரி மாவட்டத்துக்கு 1 லட்சத்து 78 ஆயிரத்து 300 சேலைகளும், 1 லட்சத்து 92 ஆயிரம் வேட்டிகளும் ஆக மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரத்து 300 வேட்டி– சேலைகள் வந்து சேர்ந்துள்ளன. இவை அனைத்தும் நெல்லை கோ–ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.News