ஜன்தன் வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்கும் பணி: தக்கலை ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு
Views - 197 Likes - 0 Liked
-
ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் தொகை திடீரென அதிகரித்து இருப்பதால் அதன் வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதித்து ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனையை விதித்து உள்ளது. இதற்கிடையே ஜன்தன் வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்கும் பணி குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
கோழிப்போர்விளை தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கடந்த 2 நாட்களாக மகளிர் திட்ட ஊழியர்கள் சிலர் முகாமிட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைக்க குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த பணி மாலை வரை நடந்தது.News