ரேஷன் கடைகளில் ஆதார் பதிவு சிறப்பு முகாம்
Views - 189 Likes - 0 Liked
-
அகஸ்தீஸ்வரம் தாலுகாவுக்கு உட்பட்ட ரேஷன்கார்டுதாரர்களில் ஒரு சில கார்டுகளுக்கான உறுப்பினர்களில் பாதி பேருக்கு மட்டுமே ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதி உறுப்பினர்களுக்கு பதிவு மேற்கொள்ளப்படாமல் இருப்பதாகவும், முழுக்க, முழுக்க ஆதார் பதிவு செய்யப்படாமல் சுமார் 5 ஆயிரம் கார்டுகள் தற்காலிக ரத்து நிலையில் இருப்பதாகவும் வழங்கல் துறை அதிகாரிகளால் கூறப்படுகிறது. இந்தநிலையில் வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து ரேஷன்கார்டுதாரர்களில் ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் “ஸ்மார்ட் கார்டு“கள் வழங்கப்பட உள்ளது. எனவே ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கும் பணி வருகிற மார்ச் மாதம் முதல் தொடங்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே ரேஷன் கார்டில் பாதி உறுப்பினர்கள் அல்லது ஒரு சிலருக்கு மட்டுமே ஆதார் பதிவு செய்தவர்கள் முழுமையாக பதிவு செய்து கொள்ளும் வகையில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 28–ந் தேதி வரை அகஸ்தீஸ்வரம் தாலுகாவுக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. எனவே இந்த முகாம் நடைபெறும் நாட்களில் காலை அல்லது மாலை வேளைகளில் பொருட்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் குமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, தோவாளை தாலுகாக்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
News