ஏரி, குளங்களை சீரமைக்கும் பணி எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
Views - 196 Likes - 0 Liked
-
தமிழகத்தில் வறட்சியை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் பண்டைய ‘குடிமராமத்து’ திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க ஆணையிட்டது.30 மாவட்டங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1,519 குடிமராமத்து திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் விதமாக, காஞ்சீபுரம் மாவட்டம், மணிமங்கலம் கிராமம், மணிமங்கலம் ஏரியினை சீரமைத்திடும் குடிமராமத்து திட்டப் பணிகளை எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.பணிகள்குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நீர்வள ஆதாரத்துறை முதன்மை தலைமை பொறியாளர் எஸ்.தினகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்.மாவட்டங்களில்...இன்று மாநிலத்தின் பிற மாவட்டங்களில் அமைச்சர்கள், தலைமையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கலெக்டர்கள், ஆகியோர் முன்னிலையில் நீர்வள ஆதாரத்துறையின் பராமரிப்பின் கீழ் உள்ள நீர் நிலைகள் மற்றும் வாய்க்கால்களை சீரமைக்கும் குடிமராமத்து திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்கள்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.News