நிர்வாகிகளின் மாறுபட்ட கருத்துகளால் பின்னடைவு அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பேச்சு தாமதம்
Views - 203 Likes - 0 Liked
-
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு 2 அணிகள் உதயமான நிலையில், 2½ மாத இடை வெளிக்கு பிறகு சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் ஒன்றாக இணையும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.சமரச பேச்சுவார்த்தைமுதற்கட்டமாக, அ.தி.மு.க. அம்மா அணியில் இருந்து டி.டி.வி.தினகரன் ஓரங்கட்டப்படுவதாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு அமைச்சர்கள் அறிவித்தனர். ஒரு சில அமைச்சர்கள், எதிர் அணிக்கு தலைமை வகிக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை பாராட்டி பேசினர்.இதனால், அ.தி.மு.க.வில் உள்ள 2 அணிகளும் வெகு விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சமரச பேச்சுவார்த்தைக்காக இரு அணிகளின் சார்பில் குழுக்கள் அமைக்கும் ஏற்பாடுகளும் நடந்தன.இந்த நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி ஒன்றில், “சசிகலா குடும்பத்தை விலக்கி வைத்தது எங்களது தர்மயுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி” என்று கூறி இருந்தார்.ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எரிச்சல்ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்தை நையாண்டி செய்யும் வகையில் அமைச்சர் டி.ஜெயக்குமார், “அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி பெற்றதும் என்னால் தான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறுவார்” என்று தெரிவித்து இருந்தார். இது, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.இந்தநேரத்தில், முதல்- அமைச்சர் பதவியையும், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியையும் ஓ.பன்னீர்செல்வம் கேட்பதாகவும், சில முக்கிய நிபந்தனைகளை அவர் விதிப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.இதுகுறித்து, கருத்து தெரிவித்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, “முதல்-அமைச்சர் பொறுப்பில் எடப்பாடி பழனிசாமியே நீடிப்பார். அவருக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து இருக்கிறார். எனவே, மாற்றத்துக்கான எந்த முகாந்திரமும் இல்லை” என்று கூறினார்.புதிய நிபந்தனைகள்முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளவர்கள் இவ்வாறு எதிர் கருத்துகளை தெரிவித்தது, ஓ.பன்னீர்செல்வம் அணியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.நேற்று முன்தினம் இரவே இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் கூடி அவசர ஆலோசனை நடத்தினார்கள். நேற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவரது தலைமையில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் 4 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.அதன்பிறகு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, “முதல்-அமைச்சர் பதவியையோ, பொதுச்செயலாளர் பதவியையோ நாங்கள் கேட்கவில்லை. சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் கட்சி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு இந்த அரசு உத்தரவிட வேண்டும்” என்பது உள்பட புதிதாக சில நிபந்தனைகளை விதித்தார்.பின்னடைவுஇரு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் தெரிவிக்கும் எதிரும் புதிருமான கருத்துகள், இணைப்பு முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதில் சிக்கல் உருவாகி இருக்கிறது.இது தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் ஆகியோர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து உள்ளனர். முதல்-அமைச்சர் பதவி காலியாக இல்லை என்று தம்பிதுரை கூறி இருக்கிறார். டி.டி.வி.தினகரன் ஏதோ தியாகம் செய்தது போன்று வைகைச்செல்வன் கூறி உள்ளார்.ஒரு பக்கம் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கும்போதே நேற்று அவர்கள் தேர்தல் கமிஷனிடம், எங்களுக்குள் சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது, பிளவு எதுவும் இல்லை என்று தகவல் தெரிவித்து, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இத்தகைய செயல்பாடு சமரச பேச்சுவார்த்தைக்கான சரியான அணுகுமுறை கிடையாது.சாத்தியம் இல்லைஎனவே, ‘அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும்பத்தினரை வெளியேற்ற வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த அரசே பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று மட்டுமே நிபந்தனை விதிக்கிறோம். மற்றபடி, மக்கள் செல்வாக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் இருக்கிறது. அ.தி.மு.க.வை சேர்ந்த ஒரு லட்சத்து 8 ஆயிரம் கிளை கழக நிர்வாகிகள் சார்பில் தேர்தல் கமிஷனில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த நிர்வாகிகளின் பேச்சை வைத்து பார்த்தால் நம்பகத்தன்மை இல்லை. எனவே, 2 அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இன்றைய நிலையில் சாத்தியம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.தாமதம்இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்வு செய்தது தொடர்பாக தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை வாபஸ் பெற முடியாது என்றார்.அதே அணியைச் சேர்ந்த எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் கூறுகையில், “ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார். ஜெயலலிதா மரணம் அடைந்த போது ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்-அமைச்சராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் விசாரணை கமிஷனை அமைத்து இருக்கலாமே” என்றார்.2 அணிகளையும் ஒன்றாக இணைத்து இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பதற்கான விருப்பம் இரு தரப்பிலும் இருந்த போதிலும், அதை செயல்படுத்துவதில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் சமரச பேச்சுவார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.News