உருளைகிழங்கு பக்கோடா
Rate it
0 Users
Kumarinet
Views - 96 Likes - 0 Liked
-
தேவையான பொருட்கள்:-
உருளை கிழங்கு ---------------1/4 கிலோ
கடலை மாவு -------------------1 மேசைகரண்டி
கார்ன் ப்ளோர் -------------------2 மேசைகரண்டி
அரிசிமாவு ----------------------1/2 மேசைகரண்டி
மிளகாய் தூள் ------------------- தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது ---------- 1/2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு .
கருவேப்பில்லை சிறிதளவு .
பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்.
செய்முறை:-
முதலில் உருளை கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி மிக மெல்லிய துண்டுகளாக நீள வாக்கில் வெட்டி
தண்ணீரில் போட்டு வைக்கவும் .
ஒரு பாத்திரத்தில் மேலே கொடுத்துள்ள மாவு வகைகள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு மற்றும் மெல்லியதாக நறுக்கி வைத்துள்ள உருளை கிழங்கை முழுவதுமாக நீரை வடித்து விட்டு அதில் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் கலந்து வைத்துள்ள உருளை கிழங்கு கலவையை சிறிது சிறிதாக பரவலாக போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கடைசியாக கருவேப்பிலையையும் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
மிகவும் சுலபமாக செய்யகூடிய, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுட சுட சுவையான உருளைகிழங்கு பக்கோடா தயார்.
இதனை மாலை சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். மேலும் சாத வகைகளுக்கு பக்க உணவாகவும் வைத்து சாப்பிடலாம்.Recipes