நெல்லிக்காய் ஊறுகாய்
Rate it
0 Users
Kumarinet
Views - 215 Likes - 0 Liked
-
இதற்கு நல்ல நெல்லிக்காய் அதுதான் தோப்பு நெல்லிக்காய் என்றும் சொல்வார்களே அந்த வகைதான் தேவை. அறி நெல்லிக்காய் என்றும் மற்றொரு வகை உண்டு. அது ஜூஸ்,சட்னி , கலந்த சாதங்கள் செய்ய பயன்படும். நான் பெறியவகை நெல்லிக்காயில் ஊறுகாய் தயாரித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
வேண்டியவைகள்
நெல்லிக்காய்—அரைகிலோ
நல்லெண்ணெய்—அரைகப்
மிளகாய்ப்பொடி—-5 டேபிள் ஸ்பூன்
வறுத்துப் பொடிக்கசாமான்கள்
1 டீஸ்பூன் வெந்தயம்
2 டீஸ்பூன் சீரகம்
3 டீஸ்பூன்—கடுகு
மற்றும் மஞ்சள்பொடி—-2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி–2 டீஸ்பூன்
உப்பு.—4 டேபிள்ஸ்பூன்
நல்ல வினிகர்—6 டேபிள்ஸ்பூன்
செய்முறை
வெறும் வாணலியைச்சூடாக்கிவெந்தயத்தைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். கடுகு, சீரகத்தை வாஸனை வறும்படி வறுக்கவும். ஆறினபின் மிக்ஸியிலிட்டுப் பொடித்துக் கொள்ளவும். அலம்பித் துடைத்த நெல்லிக்காய்களை, வாணலியில் சிறிது 2 ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து , அதில் போட்டு லேசாக வதக்கி இறக்கவும். காய்கள் ஆறியவுடன், பகுதி,பகுதியாக சிறுகத்தியின் உதவியுடன் இதழ்களாகப் பிறித்துக் கொட்டைகளை நீக்கவும். உப்பை, அரை கப் ஜலம் விட்டுக் காய்ச்சி சற்று சுண்டியதும் இறக்கவும்.
அகன்ற ஜாடிக் கிண்ணத்தில் மிளகாய்ப்பொடி,வெந்தய, கடுகுப் பொடிகள், சீரக,பெருங்காயப்பொடிகள், இவைகளுடன், நெல்லிக்காய்த் தளர்களைச் சேர்த்து மிகுதி எண்ணெயைக் காய்ச்சி விடவும். உப்பு ஜலம், வினிகர் இவைகளையும் சேர்த்துக் கிளறவும். உப்பு ஸரி பார்த்துக் கிளறி சுத்தமான பாட்டிலில் எடுத்து வைத்து, 2, 3 நாட்கள் ஊற விடவும். தினமும் சுத்தமான ஈரமில்லாத கரண்டியினால் கிளறவும். பிறகு பாட்டிலின் வாயில் மெல்லிய துணியினால் கட்டி மூடி , நல்ல வெய்யிலில் 4, 5 நாட்கள் வைத்து எடுக்கவும். உப்பும், எண்ணெயும் சற்று அதிகமிருந்தால் ஊறுகாய் கெட்டுப் போகாது. காற்று புகாத அழுத்தமான மூடியினால் பாட்டிலை மூடி உபயோகிக்கவும். சாதாரணமாக நெல்லிக்காய் சீக்கிரம் கெட்டுப் போகக் கூடிய வஸ்து. ஆதலால் பிரிஜ்ஜில் வைத்து வேண்டிய அளவு வெளியில் எடுத்து உபயோகித்தால் மிகவும் நல்லது. நல்ல ருசியான ஊறுகாய்.உ ப்பு, காரம், எண்ணெய் ருசிக்குத்தக்கபடி அதிகமாக்கலாம்.
Recipes