தேவையானவை:
ஜவ்வரிசி - 100 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்,
கேரட் துருவல் - ஒரு கப்,
வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 1,
துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
கொத்த மல்லி - சிறிதளவு,
விருப்பப் பட்டால் நெய் - 1 டீஸ்பூன்,
எலுமிச்சம் பழம் - அரை மூடி.
செய்முறை:
ஜவ்வரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊற விடவும்.
கடாயில் நெய் விட்டு, கடுகு, பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு வெங்காயம், பொட்டுக் கடலை, இஞ்சி,
கேரட் துருவல், வேர்க்கடலை எல்லா வற்றையும் சேர்த்து, ஊறிய ஜவ்வரிசியை யும் சேர்த்துக் கிளறவும்.
உப்பு சேர்த்துக் கிளறி ஜவ்வரிசி வெந்ததும் நறுக்கிய கொத்து மல்லி எலுமிச்சம் பழச்சாறு கலந்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
வெங்காயச் சட்னி:
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 10 சின்ன வெங்காய த்தைத் தோல் உரித்துச் சேர்த்து வதக்கவும்.
2 காய்ந்த மிளகாய், 2 டீஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து வறுத்து,
உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடுகு தாளித்து நன்றாகக் கலக்கவும்.

Kumarinet